வடக்கு, கிழக்கு மக்களுக்கு 2,500 வீடுகள்: ஜனாதிபதி உறுதி.
[2025-11-08 12:15:34] Views:[14]
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போது வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு 2,500 வீடுகள் அமைத்து தரப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”வீட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சகல தரப்பினர்களையும் உள்ளடக்கியதாக புதிய அணுகுமுறைக்கு அமைய, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அடுத்த ஆண்டு முதல் "தமக்கெனதோர் இல்லம் - அழகான வாழ்க்கை" வீட்டுவசதி நிகழ்ச்சி திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.










