அஸ்வெசும திட்டம் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்கு கிளிநொச்சியில் செயலமர்வு!
[2025-11-03 12:42:37] Views:[21]
கிளிநொச்சி மாவட்டத்தில்"அஸ்வெசும" முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
குறித்த செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நலன்புரி நன்மைகள் சபையின் ஏற்பாட்டில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.
மீளவும் தகவல்களை சான்றுப்படுத்தும் கட்டத்தின் கீழ், தகவல் சேகரிப்பு மற்றும் எண்ணீட்டு அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வாக இது நடைபெற்றது.










