துரோகத்திற்கான நோபல் பரிசு பன்னீர் செல்வத்திற்கு கொடுக்கலாம் என செங்கோட்டையன் தெரிவிப்பு.
[2025-11-03 12:39:00] Views:[11]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான பேட்டி அளித்தபோது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்” என்று அவர் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி (ஈபிஎஸ்) அதிமுகவுக்கு வருவதற்கு முன்பே நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் என்று தனது சீனியாரிட்டியை வலியுறுத்தினார். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும் என்று விமர்சித்த அவர், நீக்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார். இந்த நடவடிக்கை கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அதனை தொடர்ந்து, துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார் என கூறப்படுகிறது.










