யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது..!!
[2025-11-02 10:46:37] Views:[19]
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸாரால் சுமார் மூன்று கோடிக்கும் அதிக மதிப்புள்ள 47 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த நபர்கள் கேரள கஞ்சாவை பருத்தித்துறை போலீஸ் பிரிவிலுள்ள கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது போலீஸார் சுற்றிவளைத்து 47 பொதி கஞ்சாவை கைப்பற்றியதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மற்றும் இச் ம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களும், மற்றும் கஞ்சா படகு உட்பட்ட பொருட்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன.










