யாழ்ப்பாணத்திற்கு சிக்குன்குனியா அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!!
[2025-11-01 11:16:48] Views:[11]
யாழ்ப்பாணத்தில் இம்முறை சிக்குன்குனியா நோயும் பரவ ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நவம்பர் முதல் பெப்ரவரி வரையான மழை காலத்தில் டெங்கு, இன்புளுவென்சா, எலிக்காய்ச்சல, தைபஸ் போன்ற நான்கு நோய்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் இம்முறை சிக்குன்குனியாவும் பரவ ஆரம்பித்துள்ளதாங்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்றன நுளம்புகளால் ஏற்படுகின்றது. தைபஸ் உண்ணியால் பரவுகின்ற ஒரு நோய் அது போல இன்புளுவென்சா நாம் தும்மும் போதும் இருமும் போதும் பரவுகின்றது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினுடைய அறிகுறிகளாக அதிகளவான காய்ச்சல், தலை நோ, கண்ணுக்குப்பின் நோ ஏற்படல், உடல் வலி ஏற்படும். இது ஆரம்ப கட்டமாகக் காணப்படும். அதேபோன்று காய்ச்சல் தணியும் போது வாந்தி, வயிற்றுக் குத்து போன்றன ஏற்படும் இது அபாயகரமானதாக காணப்படும்.
சிக்குன்குனியாவினுடைய அறிகுறியாக கடும் காய்ச்சல், மூட்டுக்களில் நோ ஏற்படும். இது காய்ச்சல் விட்ட பின்னரும் ஒரு வாரம் அல்லது பல மாதங்கள் கூட தொடரும்.










