பல மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!
[2025-11-01 10:53:17] Views:[13]
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது. கஞ்சா கடத்திய இருவர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்
அவர்களிட ம் இருந்து 185 கிலோகிராம் 600 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது .
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நாற்பத்தொரு (41) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலம், 5267 கிலோகிராமை விட அதிகமான கேரள கஞ்சாவை இலங்கையே அரசாங்க பாதுகாப்புஆதிகாரசிப்பினால் கைப்பற்றியுள்ளனர் என கூறப்படுகிறது.










