உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
[2025-10-25 10:46:15] Views:[10]
2025 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுத் தகவல் தொழில்நுட்பத் தேர்வு டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை நடைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.










