நாகவிகாரையில் இடம்பெற்ற வைபவம்!
[2025-10-13 13:39:47] Views:[11]
தமிழ் பெளத்த காங்கிரஸ், சர்வதேச இந்து பெளத்த ஒற்றுமைக்கான அமைப்பு மற்றும் ஈழத்து இந்து சமுதாயப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் விசேட பூசை வழிபாடு யாழ். ஸ்ரீ நாகவிகாரையில் இடம்பெற்றது.
ஆரியகுளம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளோடு வீதி உலா ஆரம்பமாகி யாழ். நாக விகாரையை வந்தடைந்ததனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட வழிபாடுகளுடன் வஸ்திர தான வைபவமும் இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், நாகவிகாரை விகாராதிபதி, மறவன்புலவு க.சச்சிதானந்தன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.










