அஸ்வெசும கொடுப்பனவு நாளை பயனாளிகளின் கைகளுக்கு..!
[2025-09-25 21:17:37] Views:[9]
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை பயனாளர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட 602,852 முதியோருக்காக ரூ 3,01,42,60,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் நாளையிலிருந்து பயனாளிகள் தங்கள் முதியோர் உதவித்தொகையை தொடர்புடைய பயனாளி வங்கிக் கணக்கு மூலம் பெற முடியுமெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.










