ஆன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!!
[2025-09-23 21:17:34] Views:[10]
ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
விசேடமாக சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகார சபை அறிவுறுத்துகிறது.
இவ்வாறு பொருட்களை விண்ணப்பம் செய்வதற்கு முன் விற்பனையாளரின் முகவரி, தொடர்புத் தகவல் மற்றும் வாடிக்கையாளர் மதிப்புரைகளைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.










