இலங்கை போக்குவரத்து சேவைக்கு பெண் சாரதிகளும், நடத்துனர்களுக்குமான ஆட்சேர்ப்பு தொடர்பிலான செய்தி.
[2025-09-17 14:55:32] Views:[9]
எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவைக்கு பெண் சாரதிகளும் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கை போக்குவரத்து சபையில் 750 ஊழியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்வதற்காக பெண் சாரதிகளும்,பெண் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.










