நான்கு வகையான அலங்கார மீன்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு..!!
[2025-09-15 19:22:42] Views:[15]
மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் வள அமைச்சகம் 4 வகையான அலங்கார மீன் இனங்களை வளர்ப்பதட்கு தடை செய்யும் முகமாக வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தடை ஆக்கிரமிப்பு மீன் இனங்களான பிரன்ஹா, கத்திமீன், முதலை மீன், ரெட் லைன் ஸ்னேக்ஹெட் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்யவோ, நீர் அமைப்புகளில் விடவோ, கரைக்கு கொண்டு வரவோ, கொண்டு செல்லவோ, வாங்கவோ, விற்கவோ, விற்பனைக்கு காட்சிப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ, வைத்திருக்கவோ, இறக்குமதி செய்யவோ மற்றும் ஏற்றுமதி செய்யவோ கூடாது. மேற்கூறிய விதிமுறைகள் உயிருள்ள மீன்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும், 1998 ஆம் ஆண்டு 53 ஆம் எண் சட்டத்தால் நிறுவப்பட்ட இலங்கையின் தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் நீர் அமைப்புகளிலிருந்து உணவுக்காக மீன்பிடித்தல் மேற்கொள்ளப்படலாம்.










