கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலை பணிகள் மீள ஆரம்பம்
[2025-09-14 19:03:25] Views:[12]
பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடவத்தை - மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனுடன், கடவத்தை இன்டர்சேஞ்ச் ஹப் மற்றும் கடவத்தையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 500 மீற்றர் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கட்டுமானப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் சுமார் ரூ. 8.6 பில்லியனை ஒதுக்கியுள்ளது.
இதேவேளை சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து பெறப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுடன் இந்த திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனதெரிவித்துள்ளார்.
37 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகளை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.










