யாழில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!
[2025-09-13 14:40:23] Views:[13]
யாழ்ப்பாணத்தில இன்றையதினம் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த வயதான பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று காலை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தவேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.










