1000 அடி பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 15 பேர் பலி பலர் கவலைக்கிடம்..!!
[2025-09-05 22:07:40] Views:[13]
எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேட்படி பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
பதுளை மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் பாலித ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கைகால்களை இழந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்களின் நிலைமை மோசமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.00 மணி வரை காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.










