பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் கடுமையாகும் புதிய கட்டுப்பாடுகள்..!
[2025-09-04 21:11:09] Views:[9]
அரசாங்க பாடசாலைகளில் தரம் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கைகளை இரத்து செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிட அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு, ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்ட வரம்பில்வைத்திருப்பது அவசியமாகும்.
இதனால் நாட்டில் உள்ள அனைத்து பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, மற்றைய தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும் வாய்ப்பை வழங்குவதற்கான முறையான வழிமுறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது என கூறப்படுகிறது .
அதற்கு ஏற்ற வகையில், பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்க புதிய சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிட அமைச்சரவை திட்டமிடப்பட்டுள்ளது.










