மான் வேட்டையில் ஈடுபட்ட ஐவர் கைது.!
[2025-08-26 10:33:11] Views:[11]
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலகுடாவெவ மற்றும் மொரவெவ பகுதிகளைச் சேர்ந்த 40 வயதுக்கும் 50வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் துப்பாக்கி பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக மொரவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது
தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை பொலிஸார் சோதனை இட்டபோது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததுடன் வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் மீட்டனர்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியுடன் மேலும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.










