பருத்தித்துறையில் இடம் பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
[2025-08-25 18:17:44] Views:[10]
யாழ். பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று (25) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை 8:30 மணியளவில் ஆரம்பமான இப் போராடாம் , வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
போராட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வரசாராசா கஜேந்திரன் உட்பட சிலர் கலந்து கொள்ள விடினும் கடைசியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.










