நல்லூர் தேர்த் திருவிழாவில் நகை திருடிய இளம் யுவதி
[2025-08-22 10:34:14] Views:[10]
நேற்று நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட இளம் யுவதியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யுவதி ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்டார். பொலிஸார் அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










