சருமத்தை வெண்மையாக்க செயற்கை அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!
[2025-08-12 19:29:02] Views:[12]
சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தேசிய மருத்துவமனையின் நிபுணர் கே.டி.சி. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களில் பெரும்பாலும் பாதரசம், ஹைட்ரோகுவினோன் மற்றும் பிற கன உலோகங்கள் உள்ளன.
அவற்றினால் உடலின் மிகப்பெரிய உறுப்பான சருமத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிறுவர்கள் மற்றும் இளம் தாய்மார்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
நமது சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அதிகப்படியான முகப்பரு, தோல் மெலிந்து இரத்த நாளங்களின் தோற்றம், தோல் இறுக்கம், தேவையற்ற முடி வளர்ச்சி, நிறமாற்றம், சிறுநீரக பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர் கூறியுள்ளார்.
அத்தகைய அழகுசாதனப் பொருட்களில் பாதரசம் இருப்பதால், அவை சருமத்தில் மெலனின் நிறமியைக் குறைக்கின்றன. மெலனின் குறைவது சூரியனின் கதிர்களால் சேதத்தை ஏற்படுத்தும்.
தங்கள் தோட்டத்தில் இருந்து கிடைக்கும் கற்றாழை, வெள்ளை சந்தனம் மற்றும் வெந்தயத்தை இயற்கையாகவே தங்கள் சருமத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது இரசாயன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










