நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை: 838 பேர் கைது..!
[2025-08-08 14:57:32] Views:[15]
நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 20 பேர் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்களாகவும், 675 பேர் பிடியாணை அடிப்படையில் கைதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நடவடிக்கையில் 6,129 பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்பட்டு, 25,755 நபர்கள் 10,602 வாகனங்கள், மற்றும் 7,998 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும், 4 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 86 பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், கவனகுறைவாக வாகனம் செலுத்திய 3,828 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.










