வாகனம் வாங்க காத்திருப்போருக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்.
[2025-08-07 19:18:54] Views:[11]
வாகன இறக்குமதிக்கு இறக்குமதி எவ்வித இடையூறுமின்றி தொடரும் எனவும், இறக்குமதிக்கு தடை இல்லை, வரி உயர்வும் இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று உறுதியளித்தார்.
வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்பது உண்மையற்ற வதந்தி. இந்த ஆண்டு வாகனம் வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு வாங்கலாம். எந்த மாற்றமும் இருக்காது, என ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிலர் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போதைய கொள்கையை மாற்ற அரசாங்கத்திற்கு எவ்வித நோக்கமும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.










