NPP யின் கொள்கை அறிக்கைக்கு அமைய குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்.!
[2025-08-07 11:06:43] Views:[14]
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக குறிப்பிட்டுள்ளார்.
அவர் நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சாரக் கட்டணக் குறைப்பு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் இந்த அறிக்கையை எதிர்க்கட்சிகள் திரிபுபடுத்தி முன்வைத்துள்ளனர். அவர்கள் கூறுவது போல் மின் கட்டணத்தைக் குறைப்பது சாத்தியமில்லை.
மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு குறைக்கப்பட்ட ஒரு காலம் இதற்கு முன்னதாக இருந்தது, அதன் கடுமையான தாக்கத்தை மின்சார சபை இன்னும் எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தற்போதைய அரசாங்கத்திடமிருந்து மக்கள் நிலையான மின்சாரக் கட்டணக் குறைப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக மேலும் தெரிவித்துள்ளார்.










