நெடுந்தீவு அருகே சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது.!
[2025-08-05 11:40:37] Views:[11]
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு, மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










