இன்று முதல் GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம்.
[2025-07-28 11:45:10] Views:[14]
மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
GovPay ஊடாக அபராதம் செலுத்தும் வசதியை விரைவில் நாடளாவிய ரீதியில் செயட்படுத்த திட்டமிட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.










