இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!
[2025-07-26 20:53:39] Views:[16]
இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு(CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சுமார் 5400க்கும் மேற்பட்ட இணையக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், எக்காரணம் கொண்டும் கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
மேலும் சமூக ஊடகங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
தெரியாத இணைப்புகளை அழுத்தி உட்செல்ல வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு(CERT) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.










