அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கான தகவல்
[2025-07-23 18:51:51] Views:[12]
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளர்களுக்கான ஜூலை மாத உதவித்தொகை நாளை (24) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
14,24,548 குடும்பங்களுக்கு இந்த மாத உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயனாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகள் மூலமாக தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டம், சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்திர நிதி ஆதரவு வழங்கும் திட்டமாக செயல்படுகிறது.










