டீசலில் மண்ணெண்ணெய் கலந்த சாரதி!
[2025-07-17 09:57:55] Views:[13]
டீசல் எரிபொருளுடன் மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு செல்லும் சில பாரவூர்திகள் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்தபோதே பாரவூர்தி ஒன்றின் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.
பாரவூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.










