ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் சேவை: 40 வருடங்களின் பின் மீணடும் ஆரம்பம்...!
[2025-07-16 11:17:27] Views:[14]
இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே 4 தசாப்தங்களின் பின்னர், மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வரலாற்றில்,தமிழகத்தின் தனுஸ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது. எனினும் 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஸ்கோடி கடலில் மூழ்கியதால், அந்த சேவை நிறுத்தப்பட்டது.
இதன் பின்னர், ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து இடம்பெற்று வந்தது எனினும் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது இந்நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










