yarlathirady.com

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே மக்களின் மீள்குடியமர்வு சாத்தியமாகியிருக்கின்றது:

[2025-06-19 12:42:47] Views:[13]

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும் முகமாலையில் நேற்று (18.06.2025)புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்;

கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலராக 2003ஆம் ஆண்டு இணைந்துகொண்டதிலிருந்து மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நான் பணியாற்றியிருக்கின்றேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாகக்கருதுகின்றேன். தங்கள் உயிரை துச்சமாக மதித்து இந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

முகமாலை பிரதேசம் கடந்த காலத்தில் போரின் எச்சங்களை வைத்திருந்தது. மக்களின் மீள்குடியமர்வுக்கு அது தடையை ஏற்படுத்தியது. இன்று அது மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது.

ஹலோ ட்ரஸ் நிறுவனம் மகத்தான சவால்களை எதிர்கொண்டு மேற்கொண்ட அவர்களின் கடினமான முயற்சிகள், நமது மக்களின் பாதுகாப்பான மீள்குடியேற்றத்துக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களின் மறுமலர்ச்சிக்கும் வழி வகுக்கின்றன.

இந்த நிலத்தை தரிசாக வைத்திருக்கும் மற்றும் அதன் மக்களை காத்திருக்க வைக்கும் மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அகற்ற ஹலோ ட்ரஸ், பெரும்பாலும் ஆபத்தான சூழ்நிலைகளில் அயராது உழைத்து வருகிறது.

இது வெறும் நிலத்தை சுத்தம் செய்வது பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கையை கட்டியெழுப்புவது பற்றியது. இது குடும்பங்களுக்கு தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும், தங்கள் வயல்களை மீண்டும் பயிரிடவும், தங்கள் குழந்தைகளை பயமின்றி விளையாட அனுமதிக்கவும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றுபவர்களின் சாதனைகளுக்கு நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள், அமைப்புக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் எதிர்காலத்தில், இலங்கை முழுவதும் கண்ணிவெடிகளின் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம். உங்கள் சேவை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும், அதற்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு, ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முகமாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது.

இதன் பின்னர் பணியாளர்கள் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

சிற்றிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் த.ஜெயசீலன், கனேடிய துணைத்தூதுவர் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.