yarlathirady.com

தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது.! காரணம் தெரியுமா?

[2025-06-06 20:07:59] Views:[18]

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அந்தவகையில், கோடை வெயிலுக்கு இதமாக அனைவரும் அதிகம் எடுத்துக்கொள்ளும் ஒரு பழம் தான் இந்த தர்பூசணி பழம்.

ஆனால், தர்பூசணி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

பொதுவாக, தர்பூசணியில் 92% தண்ணீர் இருக்கிறது, எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின் மேற்கொண்டு தண்ணீர் குடித்தால் செரிமான சக்தியை குறைக்க வாய்ப்புள்ளது.

தர்பூசணி சாப்பிட்ட பின்பு அதன் சாறு, ஏற்கனவே நம் குடலில் தங்கிவிடுகிறது. மேற்கொண்டு தண்ணீர் குடிக்கும் போதுதான் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின், 15-20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

தர்பூசணியில் அதிகளவு கலோரிகள் உள்ளதால் இதை சாப்பிடும்போது தண்ணீர், சர்க்கரை, சோடா என எதையும் கலக்காமல் அப்படியே பழமாகவோ, சாறாகவோ சாப்பிடலாம்.

தற்போது, தர்பூசணியின் இனிப்பு சுவையை அதிகரிக்க சிலர் இந்த பழத்தில் சாட் மசாலாக்களை சேர்த்து சாப்பிடுவதுண்டு. இதனால் அந்த பழத்தில் இருக்கும் நீர்ச்சத்து குறையும். மேலும், செரிமான கோளாறும் ஏற்படும் என கூறப்படுகிறது.

இப்படி மசாலா சேர்த்து சாப்பிடும் போது சுவை நன்றாக இருந்தாலும், இது வயிற்றுக்கு உபாதையை ஏற்படுத்தும்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.