yarlathirady.com

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்:

[2025-06-06 19:25:24] Views:[10]

புலிகளின் வைப்பகத்திலிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மக்களின் நகைகளை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக காவல்துறை திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க நகைகள் யுத்த காலத்தின் போது வடக்கு மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தங்க நகைகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

நகைகளை உரியவர்களுக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். அறிக்கை கிடைத்ததன் பின்னர், மக்கள் அவற்றை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகும், அப்போது அத்தாட்சிப் பத்திரங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு பெறப்படாமல் சில நகைகள் மின்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை வடக்கு அபிவிருத்தி நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதில் வைப்பிலிடப்படும்.

அதில் அரசாங்கத்தாலும் ஒரு தொகை வைப்பிலிடப்படும். புலம்பெயர் தமிழர்களும் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு பங்களிப்புக்களை வழங்கலாம்.

குறித்த நிதியத்தினூடாக வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.