புதிய இராணுவத் தளபதியிடமிருந்து இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு..!!
[2025-01-03 10:52:19] Views:[10]
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்புப் படைத் தளபதிகள் உட்பட அனைத்து இராணுவ தரப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், போலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 451 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 3570kg கஞ்சா, 1040kg கேரள கஞ்சா, சுமார் 11kg ஐஸ் மற்றும் 61kg ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், சுமார் 850 லீற்றர் சட்டவிரோத உள்நாட்டு மதுபானம் மற்றும் 15 000 லீற்றர் கோடா மற்றும் 68 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 7340kg பீடி இலைகளும் யால காப்புக்காடு, உடவலவ பிரதேசங்களில் கிட்டத்தட்ட 3459 kg கஞ்சாவும் 440,000 கஞ்சா செடிகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










