அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க அரசு நடவடிக்கை !
[2024-12-28 11:46:57] Views:[10]
அரச அதிகாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாவிற்கு மிகையாகாமல் விசேட முற்பணமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்பணம் வழங்கும் நடவடிக்கை 2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 28 அன்று முடிவடையும் என்று குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திகதிக்கு பின்னர் பணம் செலுத்தக் கூடாது என அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அவர் அறிவித்துள்ளார்.










