yarlathirady.com

150 கோடி மோசடி: நாடு கடத்தப்பட்ட தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

[2024-12-27 12:42:52] Views:[13]

நிதி மோசடி செய்துவிட்டு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குறித்த கணவன், மனைவி 2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் உரிய அனுமதியில்லாமல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தனர்.

கடல் மார்க்கமாக சென்ற இவர்களை நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் வைத்து காவற்துறையினர் கைது செய்து திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த தம்பதி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி முறைப்பாடு இருப்பதால், இலங்கை அரசின் வேண்டுதலுக்கமைவாக மீண்டும் இலங்கைக்கு நேற்று வியாழக்கிழமை (26.12.2024) அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்த அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறுவனம், இஸ்லாமிய சட்டப்படி செயல்படுவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் வைப்புத் தொகையைப் பெற்று வந்ததாகவும், இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து சுமார் 150 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் அவர்களுக்கு எதிராக இலங்கையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.