கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி! 3 பேர் படுகாயம்;
[2024-12-26 09:26:01] Views:[14]
கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் கிளிநொச்சி நகரில் A9 வீதியில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பொலிசார் ரிப்பர் வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர்.










