இருவர் காட்டு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் கைது!
[2024-12-25 20:07:00] Views:[10]
நேற்று (24) இரவு அனுமதி இன்றி அரச காட்டுக்குள் புகுந்து சுமார் 1500 மேற்பட்ட காட்டு காயா தடிகளை வெட்டிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புதுக்குடியிருப்பு வள்ளிபுரத்தில் இருந்து காட்டு காயா தடிகளை வெட்டி, கப்ரக வாகனம் ஒன்றில் மறைத்து சென்ற பொழுது பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, வீதி சோதனையின் மூலம் கப்ரக வாகனமும் அதன் சாரதியம் மற்றும் ஒரு நபரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.










