விவசாயிகளுக்கு இழப்பீடு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்...!
[2024-12-24 21:11:46] Views:[11]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வீடுகள், நெடுஞ்சாலைகள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
சேதமடைந்த நெற்பயிர்களில் 2.5 அல்லது 3 மாத நெல் ரகங்கள் அல்லது பொருத்தமான குறுகிய கால பயிர்களை மீண்டும் பயிரிடுவதற்கு தேவையான முட்டை அரிசி மற்றும் விதைகளை வழங்க முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கடபட்டுள்ளது.
தற்போதுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர்ச்செய்கையில் 02 ஹெக்டேயர் வரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.40,000/= வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், பெரியவெங்காயம் மற்றும் சோயாபீன் ஆகிய 01 ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) வரையிலான 05 வகையான பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.40,000/= நஷ்டஈடு வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.










