ஆளுநரை சந்தித்த புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதி;
[2024-12-24 09:56:01] Views:[11]
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (23) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்டத்தில் பணிபுரிந்தமையை நினைவு கூர்ந்தார்.
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக் கலந்துரையாடுவோம் என கட்டளைத்தளபதி ஆளுநரிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் யகம்பத் கடந்த வெள்ளிக்கிழமை (20) யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.










