கலை கலாசார வாகன ஊர்தி நடைபயணம்
[2024-12-16 10:37:49] Views:[15]
நேற்று (15) மாலை யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வடமாகாண அமைச்சின் எற்பாட்டில் உலக சுற்றுலா தின கலை கலாசார வாகன ஊர்தி நடை பயண நிகழ்வு ஆரம்பமானது. வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.இதில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், வடமாகாண சுற்றுலா பணியகம், வடமாகாண அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் ஆரம்பமாகி அங்கியிருந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.எஸ் வீதி ஊடாக சென்று யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் இனிதே நிறைவடைந்தது. கலாசார நிகழ்வுகளான மேளதாள, நாஸ்வர இசைகள், சிறுவர் நடனங்கள், கோலாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டநிகழ்வுகள் நடைபெற்றன.










