இன்றும் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு!
[2024-12-12 10:52:15] Views:[10]
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக் கடலில் நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழகக் கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 MM அளவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரவு வேளையில் மாலை , மற்ற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.










