இடியுடன் கூடிய மழை - டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கலாம்.
[2024-12-08 10:45:47] Views:[10]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பல தடவைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 MM அதிகளவின் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
காலை வேளையில் பனிமூட்டமான நிலை மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் நிலவும் எனவும்
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.










