நீதிமன்றம் விடுவித்த போதும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்;
[2024-12-04 12:07:38] Views:[10]
நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்து கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணம், அனலைதீவு பகுதியில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்ற அனலைதீவை சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவரும் கடற்சீற்றம் காரணமாக தமிழக கடற்பரப்பினுள் தத்தளித்த நிலையில், தமிழக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டிருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட போதும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களின் உறவினர்கள் ஊர்காவற்துறை பகுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவர்கள் இருவரையும், அவர்களின் படகு மற்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரத்துடன் கடல் வழியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.










