யாழில் இளைஞன் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது.!
[2024-11-30 06:18:34] Views:[13]
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் மேற்கு, சுன்னாகம் முகவரியில் வசிக்கும் மனோகரன் கஜந்தரூபன் என்பவர் யாழ்ப்பாணப் பயங்கரவாத பிரிவு அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது சந்தேக நபரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் இன்று 2024.11.30 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.










