ஆலய பூசகரை கட்டி வைத்து பணம் நகை கொள்ளை.!
[2024-11-28 06:17:56] Views:[12]
ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்தத கொள்ளை சம்பவமானது நேற்று (27) முற்பகல் யாழ்ப்பாணம் - கைதடி, ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது கொள்ளையருக்கு உதவிய பெண் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான பெண்ணை இன்றைய தினம் (28) சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.










