பெருந்தொகை போதைப்பொருளுடன் மாலைதீவில் சிக்கிய இலங்கை மீன்பிடி படகு!
[2024-11-25 12:18:18] Views:[10]
இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள் இலங்கை மீன்பிடி இழுவை படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு இலங்கை கடற்படையினரின் உதவியுடன் நேற்று முன்தினம் (23) மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 344 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 124 கிலோ கொக்கெய்ன் (Cocaine) ஆகியவற்றை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவைப்படகு கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள், மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.










