இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து !
[2024-11-25 11:21:38] Views:[11]
வட்டவளை பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (25) காலை 6.40 மணியளவில் வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து இ.போ.ச பேருந்து எதிர்திசையில் வருவதை கண்டு பிரேக் அழுத்தியதில் தனியார் பேருந்தின் பின்பகுதி நழுவி அரச பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










