வைத்தியரின் பணத்தை திருடிய இருவர் போதைப்பொருளுடன் கைது!
[2024-11-24 20:03:03] Views:[10]
யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தினை திருடிய இருவரை போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (23) மாலை யாழ்ப்பாணம், கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அண்மையில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.
குறித்த திருட்டு சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அதன் உதவியுடன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இன்று (24) காலை அரசடி, நல்லூர் பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும்போது சந்தேக நபர்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் 240 மில்லிகிராம் ஹெரோயி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், போதைக்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










