கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்.!
[2024-11-23 12:08:50] Views:[10]
கொழும்பில் விகாரை ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம், றம்பேவ, கெந்தேவ, கோணகும்புக்வெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பம் படித்த மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் இலத்திரனியல் தொழில்நுட்பம் தொடர்பான நடைமுறை பயிற்சிக்காக கொழும்பு வந்த குறித்த மாணவன், பயிற்சி முடியும் வரை ஜம்பட்டா வீதியில் உள்ள விகாரை ஒன்ரில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விகாரை பொதுக் மலசலகூடத்திற்குச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், விகாரையின் நிர்வாகிகள் விடுதியில் தங்கியிருந்த மற்றவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மலசலகூட கதவு திறக்காததாலும், உள்ளே இருந்து சத்தம் கேட்காததாலும் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மலசலகூட கதவை உடைத்து பார்த்த போது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளார்.
விசாரணையில், அவர் கழுத்தை தானே அறுத்துக் கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு பயன்படுத்திய கத்தியும் மலசலகூடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
மலசலகூட கதவு உட்புறம் பூட்டியிருந்தமையினால், மூன்றாம் நபரின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










