முச்சக்கர வண்டிக்குள் கருநாகம்
[2024-11-18 19:31:04] Views:[11]
ஞாயிற்றுக்கிழமை (17) அன்று வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சிறுவர்கள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்றபோது பயணத்தின் இடையில் மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் மயிலம்பாவெளி எனுமிடத்தில் வைத்து பாம்பை அவதானித்த சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார். உடனடியாக வாகனம் திருத்துநரை வரவழைத்து வண்டியின் முன் பகுதியை கழட்டி பாம்பை வெளியே எடுத்து காட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார்.
டயஸ் போட்டிற்குள் மறைந்திருந்த விஷம் நிறைந்த கருநாகம் பாம்பு, வாகனம் திருத்துநரின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது.










